Wednesday, June 5, 2013

Methane gas project: Cauvery Delta Farmers Struggle (மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுக: காவிரி டெல்டா விவசாயிகள் போராட்டம்)


கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்ப ரேசன் லிமிடெட் என்ற தனியார் நிறு வனத்துக்கு திருவாரூர், நாகை, தஞ் சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட் டங்களில் காவிரி படுகையில் படிந் துள்ள மீத்தேன் எரிவாயுவை எடுப் பதற்கான அனுமதியை மத்தியஅரசு வழங்கியுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட் டால் டெல்டா மாவட்ட விவசாயம் முற்றிலுமாக அழிந்துபோகும் என்ற அபாயத்தை எடுத்துரைத்து, இத்திட் டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆவேச ஆர்ப்பாட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

நிலத்தடி நீரை வெளி யேற்றிவிட்டு, அதன்பிறகே மீத்தேன் எரிவாயுவை சேமிக்க வேண்டும்.ஏற்கனவே காவிரிடெல்டா மாவட் டங்கள் சாகுபடிப் பணிகளில் மிகுந்த பின்னடைவைத் சந்தித்து வருகின் றன. நிலத்தடி நீரும் குறைந்து வரு கிறது. இந்த மோசமான சூழ்நிலை யில் மேற்கண்ட தனியார் நிறுவனம் நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டால் விவ சாய விளைநிலங்கள் முற்றிலுமாக அழிந்துபோகும். மேலும் கடல்நீர் உள்ளே புகுந்து இருக்கின்ற தண் ணீரும் உப்புநீராக மாறிவிடும் ஆபத் தும் உள்ளது. வாயுமண்டலம் பாதிக் கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப் படும் ஆபத்தும் இதில் உள்ளது.

பாதிக்கப்படும் பகுதிகள்: குடவாசல் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியப் பகுதிகளில் சித்தாடி, குடவாசல், மேலப்பாலையூர், மழுவச்சேரி, ஓகை, கீழப்பாலையூர், கமு கக்குடி, பத்தூர், கொரடாச்சேரி, ஆர்ப்பாகூர், மஞ்சக்குடி, வடவேர், செல்லூர், நீடாமங்கலம் ஒன்றியத் தில் அனுமந்தபுரம், பூவனூர், கீழாள வந்தசேரி, அரிச்சபுரம், கோயில் வெண்ணி, ஆதனூர், அன்ன வாசல், காளாச்சேரி, மன்னார்குடி ஒன்றியத்தில் கர்ணாகூர், வடபாதி, சேரன் குளம், மன்னார்குடி, அரவத்தூர், சவளக்காரன், பருத்திக்கோட்டை, காளாஞ்சிமேடு, வலங்கைமான் ஒன் றியத்தில் சாரநத்தம், மாணிக்கமங் கலம், கொட்டையூர், கீழவிடையல், ராஜேந்திரநல்லூர், நார்த்தாங்குடி, கண்டியூர் ஆகிய பகுதிகள் முற்றிலு மாக விவசாயம் பாதிக்கப்பட்டு குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பாலைவன மாக டெல்டா மாவட்டங்கள் மாறி விடும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்ற விவசாயிகள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் கும்ப கோணம், பாபநாசம், ஒரத்தநாடு, திருவிடைமருதூர் உள்ளிட்ட 12 கிராமங்களிலும் மீத்தேன் எடுக்கும் நிறுவனம் முதல்கட்டவேலையைத் துவங்கியுள்ளது. மேலும் 254 கிரா மங்களில் இத்திட்டத்தைச் செயல் படுத்தப்போவதாகவும் அறிவித்துள் ளது. இதனால் சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாலைவனமாக் கப்படும் அச்சம் விவசாயிகளிடத்தில் ஏற்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment