Monday, June 3, 2013

சீனாவில் கோழி இறைச்சிக்கூடத்தில் தீ விபத்து: 113 பேர் பலி - 55 பேர் படுகாயம்

பெய்ஜிங், ஜூன் 3-
சீனாவில் கோழி இறைச்சிக் கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 113 பேர் பலியாகினர். 55 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சீனாவில் ஜிலின் மாகாணத்தில் டெகு என்ற இடத்தில் கோழி இறைச்சிக்கூடம் உள்ளது. இதில் 1200 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த தொழிற்சாலையின் மூலம் ஆண்டிற்கு 67 ஆயிரம் டன் இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திங்களன்று உள்ளுர் நேரப்படி காலை 6 மணிளவில் தொழிற்சாலையில் 300 தொழிலாளர்கள் பணியாற்ற வந்திருக்கின்றனர்.

திடீரென தொழிற்சாலையில் தீ பற்றி எரிந்திருக்கிறது. இதையடுத்துஅங்கு அபாய ஒலி எழுப்பப்பட்டிருக்கிறது. இதனால் பதறியடித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கேட்டை உடைத்துக் கொண்டு தப்பி வெளியே ஓடி வந்துள்ளனர். ஆனால் பற்றியெறிந்த தீயால் சூழ்ந்த கரும்புகையில் எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள்ளையே மாட்டிக் கொண்டனர். பலர் தாங்கள் இருந்த இடத்தில் இருந்து 40 மீட்டர் தூரம் வரை தீ பற்றிய நிலையில் ஓடி வந்துள்ளனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை தொடர்ந்து அணைத்து வந்தனர். மதியம் தீ முழுமையாக அனைக்கப்பட்டது. தீ அணைக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலடங்கள் மீட்கப்பட்டன. அதில் இதுவரை மொத்தம் 113 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் 55 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஷாங்சங் சென்ட்ரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்துகோழிஇறைச்சி தொழிற்சாலையில் சுற்றுச்சூழல்மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி அமைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment