Thursday, May 2, 2013

பிரிந்து செல்லும் உரிமையும், பிரிவினையும்

நாடுகளுக்குள்ள பிரிந்து செல்லும் உரிமை என்பதை பிரிவினையைத் தூண்டுவது என்பதுடன் சேர்த்துப் பார்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது.

1917-ம் ஆண்டு மே மாதத்தில், சுய நிர்ணய உரிமை என்பதை வலியுறுத்திப் பேசும்பொழுது லெனின பின்வரும் வகையில் தெளிவுபடுத்தினார்.

சுதந்திரமாக, நாடுகளுக்குள்ள பிரிந்து செல்லும் உரிமை என்பதை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறித்த நேரத்தில் ஒரு குறித்த நாட்டிற்கு பிரிவினை தேவை என்று கூறப்படுவதோடு சேர்த்துப் பார்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. தொழிலாளி வர்க்கக் கட்சியானது இரண்டாவதாகச் சொல்லப்பட்ட அம்சம் குறித்து ஒவ்வொரு குறிப்பிட்ட பிரச்சனையிலும் முற்றிலும் சுதந்திரமாக தீர்மானிக்க வேண்டும், அவ்வாறு தீர்மானிக்கும் பொழுது ஒட்டுமொத்தமாக சமூக வளர்ச்சியின் நலன்களையும், சோசலிசத்திற்காக தொழிலாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போராட்ட நலன்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
(தொகுதி நூல்கள், பாகம் 24, பக்கங்கள் 302-303)

ஸ்டாலின் கூறுகிறார்:

இந்த நிர்ணயிப்பை மேலும் முன்கொண்டு செல்லும் பொழுது ஸ்டாலின் எழுதுகின்றார்:

தேசங்களின் உரிமைகள் என்ற பிரச்சனையானது ஒரு தனிப்பட்ட தன்னிறைவுப் பிரச்சனையல்ல, அது தொழிலாளி வர்க்கப் புரட்சியினுடைய பொதுவான பிரச்சனையின் ஒரு பகுதியாகும். முழுமைக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு அந்த முழுமையின் கண்ணோட்டப் பார்வையி லிருந்து கவனிக்கப்படுதல் என்பதாகும். கடந்த நூற்றாண்டின் நாற்பதாம் ஆண்டுகளில் போலந்துக்காரர்கள், ஹங்கேரியர்களின் தேசிய இயக் கத்தை மார்க்ஸ் ஆதரித்தார். செக்கோஸ்லோவாகிய நாட்டுக்காரர்கள், தெற்கு ஸ்லால் இனத்தவர்களின் தேசிய இயக்கங்களை மார்க்ஸ் எதிர்த்தார். ஏன்? ஏனென்றால் செக்கோஸ்லோவாகியாகாரர்களும், தெற்கு ஸ்லால் இனத்தவரும் அச்சமயத்தில் பிற்போக்கான மக்கள், ஐரோப் பாவில் ரஷ்யாவின் புறக்காவல் படைகளாக இருந்தனர். 

எதேச்சாதிகாரத்தின் புறக்காவல் படைகளாக இருந்தனர். அதே சமயத்தில் போலந்துக்காரர்களும், ஹங்கேரியர்களும் புரட்சிகர மக்களாக இருந்தனர். எதேச் சாதிகாரத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் செக்கோஸ்லோவாகியாக்காரர்களிடையே தெற்கு ஸ்லாவியர்களுடைய தேசிய இயக்கத்திற்கு அச்சமயத்தில் ஆதரவளிப்பதென்பது ஐரோப்பாவில் புரட்சிகர இயக்கத்தின் மிக ஆபத்தான எதிரியான ஜார் மன்னனின் கொள்கைகளுக்கு மறைமுக ஆதரவை தருவதற்குச் சமமாகும்.

ஸ்டாலின் பின்னர் லெனின் கூறியதை மேற்கோள் காட்டுகின்றார்:

சுய நிர்ணய உரிமை உள்ளிட்ட... ஜனநாயகத்தில் பல்வேறுவித கோரிக்கைகள் ஒரு முழுமையான உலக இயக்கமல்ல; ஆனால் பொதுவான ஜனநாயக (தற்பொழுது பொதுவான சோசலிஸ்ட்) உலக இயக்கத்தின் ஒரு சிறு பகுதியாகும். தனியான, திட்டவட்டமான சம்பவங்களில் ஒரு பகுதியானது முழுமையோடு முரண்படும்.  அவ்வாறானால் அது நிராகரிக்கப்பட வேண்டும்.
(லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் நேஷனல் புக் ஏஜென்சி, பக்கம் 80-81)
முதல் உலகப் போர் முடியும் வரை தொழிலாளர் இயக்கத்தில் தேசியப் பிரச்சனை குறித்து நடைபெற்ற விவாதங்கள் அனைத்தும் பெரும்பாலும் முதலாளித்துவ ஐரோப்பாவின் தேசங்கள் தேசிய இனப் பிரச்சனை குறித்து ஐரோப்பாவாக பிரிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட நாடுகள் குறித்து விவாதிப்பதோடு மட்டுமே தன்னை பெரும்பாலும் கட்டுப்படுத்திக் கொண்டது. 

உலக யுத்தத்திற்குப் பின்னர் உலகில் ஏற்பட்ட விடுதலை இயக்கங்கள், காலனிகள் குறித்த அணுகுமுறைப் பிரச்சனை முன்னுக்குக் கொண்டுவந்தது. முதல் உலக யுத்தத்திற்கு முன்பு இரண்டாவது அகிலம் இந்தப் பிரச்சனையை விவாதித்தது, ஆனால் ஒரு சந்தர்ப்பவாத நிலை எடுத்தது. 

லெனினும், போல்ஷ்விக் கட்சியும் முதல் உலக யுத்தத்தை காலனிகளைக் கைப்பற்றுவதற்கான யுத்தம் என்று கூறி நிந்தித்தனர். காலனிகளுக்கு முழுச் சுதந்திரம் என்று கோரிக்கையை முற்றிலும் ஆதரித்தனர். கம்யூனிஸ்ட் அகிலத்தோடு இணைக்கப்பட்டிருந்த அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் காலனிகளின் விடுதலையை ஆதரித்தன. 

சுதந்திரத்திற்காக ஒடுக்கப்பட்ட நாடுகள் நடத்தும் போராட்டமானது முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்காக உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு உதவி செய்யும் ஒரு மகத்தான புரட்சிகர சக்தியாக உணரப்பட்டது. தேசிய இயக்கங்களும், அவைகளின் வெற்றியும் ஏகாதிபத்தியத்தின சக்தியை பலவீனப்படுத்தும் என்றும், இது வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள தொழிலாளி வர்க்கப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்குமென்றும் உணரப்பட்டது.

தேச விடுதலை இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட்டுகள் ஆதரவு தருவது சோசலிசப் புரட்சிகள் நடைபெறும் தருவாயில் சமூக இயக்கத்தை முன்கொண்டு செல்வதில் அந்த இயக்கங்கள் ஆற்றும் பங்கை மீண்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

தொழிலாளி வர்க்கப் புரட்சியுடன் இணைந்தது:
ஸ்டாலின் கூறுகிறார்:

தேசியப் பிரச்சனை என்பது முன்னர் சீர்திருத்தவாதக் கண்ணோட்டத்திலிருந்து காணப்பட்டது. மூலதனத்தின் சக்தி என்ற பொதுவான பிரச் சனையோடு ஏகாதிபத்தியத்தை தூக்கி எறிவதோடு தொழிலாளி வர்க்கப் புரட்சியோடு எவ்வித சமபந்தமும் இல்லாத ஒரு தனியான பிரச்சனை என்று கருதப்பட்டது. காலனிகளில் உள்ள விடுதலை இயக்கத்தோடு ஒரு நேரடி உறவும் இல்லாமல் ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்கம் வெற்றி பெறுவது சாத்தியம் என்றும் தொழிலாளி வர்க்கப் புரட்சியின் பக்கம் போகாமலே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு  புரட்சிகரப் போராட்டம் இல்லாமலே தேசிய காலனி ஆதிக்கப் பிரச்சனை. அதனாலேயே அமைதியாகத் தீர்க்கப்பட முடியுமென்றும், மறைமுகமாகக் கருதப்பட்டது. இந்த புரட்சி எதிர்ப்புக் கண்ணோட்டப்பார்வை அம்பலப்படுத்தப்பட்டுவிட்டதென்று நாம் இப்பொழுது கூற முடியும். 

தேசிய பிரச்சனை என்பது தொழிலாளி வர்க்கப் புரட்சியோடு சம்பந்தப்படுத்தப்பட்டு மட்டுமே அதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்பதையும் மேற்கு நாடுகள் புரட்சியின் வெற்றிக்கான பாதையானது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக காலனி நாடுகளிலும் சார்பு நாடுகளிலும் உள்ள விடுதலை இயக்கத்தின் புரட்சிகரக் கூட்டிலேயே அடங்கியிருக்கின்றது என்பதையும் லெனினிசம், நிரூபித்துக்காட்டியுள்ளது. ஏகாதிபத்திய யுத்தமும், ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. தேசியப் பிரச்சனையானது தொழிலாளி வர்க்கப் புரட்சியின் பொதுவான பிரச்சனையின் ஒரு பகுதியாகும. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பிரச்சனையின் ஒரு பகுதியாகும்.

கேள்வி இதுதான். ஒடுக்கப்பட்ட நாடுகளின் புரட்சிகர விடுதலை இயக்கத்தில் பொதிந்துள்ள புரட்சிகர சாத்தியப்பாடுகள் ஏற்கெனவேயே பயன்படுத்தப்பட்டுவிட்டதா அல்லது இல்லையா, இல்லையென்றால் இத்தகைய சாத்தியப்பாடுகளை தொழிலாளி வர்க்கம் புரட்சிக்காகப் பயன்படுத்திக்கொள்வதற்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு ரிசர்வ் பகுதியை புரட்சிகர தொழிலாளி வர்க்கத்தின் ஒரு ரிசர்வ் பகுதியாக ஆக்குவதற்கும் பின்னர் கூறப்பட்டதின் கூட்டாளியாக ஆக்கப்படுவதற்கும் ஏதாவது நம்பிக்கை இருக்கின்றதா? ஏதாவது ஆதாரம் இருக்கின்றதா?
லெனினிசம் இந்தக் கேள்விக்கு ஆம் என்று பதிலளிக்கின்றது....


மறுபடியும் இரண்டு அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன. விடுதலை இயக்கங்களின் பங்கானது அவைகள் தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கு - உலகின் சமூக வளர்ச்சிக்கு உதவி செய்வதை வைத்தே தீர்மானிக்கப்படு கின்றது. இரண்டாவதாக தேசிய விடுதலைப் பிரச்சனையைத் தீர்க்க வளர்ச்சியடைந்த (மெட்ரோ பாலிடன்) நாடுகளிலும், ஒடுக்கப்பட்ட நாடுகளிலுமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை அவசியம் என்பது மீண்டுமொருமுறை வலியுறுத்தப்படுகின்றது.

No comments:

Post a Comment