Thursday, May 9, 2013

Mao's Quotations



பிளவுபடுத்துவது புரட்சிகரமானது (To Split is Revolutionary) பிளவு தூய்மை படுத்துகின்றது (Split Purifies). ஒன்று எப்பொழுதுமே இரண்டாகும் (One always becomes Two). இரண்டு எப்பொழுதுமே ஒன்றாகாது (Two never becomes One).

வரட்டுவாதம், அனுபவவாதம், கட்டளைவாதம், வால்பிடித்தல் வாதம், குறுக்குவாதம், அதிகாரத்துவம் பணியில் அகங்காரப் போக்கு போன்ற தீமைகள் நிச்சயம் தீங்கு விளைவிப்பவையாகவும் சகித்துக் கொள்ள முடியாதவையாகவும் மக்களுக்கு இருப்பதால் கொள்கைவாதிகள் மேற்குறிப்பிட்ட குணாம்சங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

"தொழிலாளிகள், விவசாயிகளின் மூளையை
உறைய வைப்பதற்காக முதலாளிகள்
மதம் என்ற மாத்திரையைப் பயன்படுத்தினார்கள்!

ஒரு நியாயமான லட்சியம் அளவற்ற ஆதரவைப் பெறுகிறது என்பதையும், ஒரு நியாயமற்ற லட்சியம் எவ்வித ஆதரவையும் பெறுவதில்லை என்பதையும் எண்ணற்ற உண்மைகள் மெய்ப்பிக்கின்றன! 

முகமூடிக்குள் நின்று
பேசுவதைக் கைவிடுங்கள்.
எது உங்கள் அரசியல் வழியோ
அதை முன்வையுங்கள்.

ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தினால் அது இதர போராட்ட வடிவங்களை நாம் கைவிடுவது என்று அர்த்தமாகி விடாது. அதற்கு மாறாக இதர பல்வேறு போராட்டங்களும் ஆயுதப் போராட்டத்துடன் இணையாவிட்டால் ஆயுதப் போராட்டம் வெற்றி பெற முடியாது.

வர்க்கங்களையும், சரக்கு உற்பத்தியையும் ஒழித்துக் கட்டிய பிறகு ஜனநாயகம் முழுமையாக கைகூடி வந்த பிறகு, அரசு என்னும் அமைப்பு வாடி உதிர்ந்த பிறகு, பழைய சமுதாயத்திலுள்ள சுயநலம், ஊழல், மனித பண்பற்ற தன்மை ஆகியவற்றை காலங்காலமாக படிந்துள்ள தூசு என்று கார்ல் மார்க்சால் வர்ணிக்கப்பட்ட இவற்றை - மனிதன் துடைத்தெறிந்து விட்டு முழுமையான மனிதத் தன்மையை அடைவான்! 

"நவீன சமுதாயத்தில் தொழிலுக்கும், வேளாண்மைக்கும் இடையில் உள்ள முரண்பாடு (இது நகரத்துக்கும், நாட்டுப்புறத்துக்கும் இடையில் உள்ள பாகுபாட்டின் காரணமாக இருப்பது) உற்பத்திச் சக்திகளின் தொடர்ந்த வளர்ச்சிக்குத் தடையாக மாறுகிறது!"

"மனிதனின் சமுதாய வாழ்வே,
அவனுடைய சிந்தனையை நிர்ணயிக்கிறது." 

எதிரி ஆயுதம் ஏந்தாதவரை, விமர்சனம் என்பதே ஆயுதம்; எதிரி ஆயுதம் ஏந்திவிட்டால், ஆயுதம் என்பதே விமர்சனம்;

போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்” 



No comments:

Post a Comment